ரஷ்யாவில் இருந்து 6 இலட்சம் தடுப்பு மருந்துகள் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும்- இராஜாங்க அமைச்சர்!

187012 sputnik v corona vaccine
187012 sputnik v corona vaccine

ரஷ்யாவில் இருந்து சுமார் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 4 ஆம் திகதி 15 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன. இந்த தடுப்பூசி தொகுதிகள் கழற்றப்பட்டதும் இரண்டு மணி நேரங்களுக்குள் உரியவர்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 11 ஆயிரத்து 334 பேருக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கொழும்பு, கொத்தெட்டுவ, மற்றும் கொலன்னாவ மருத்துவ அதிகார பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.