பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பும் முயற்சி – அங்கஜன்

IMG 0335 1
IMG 0335 1

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதரக்கடன் மற்றும் நன் கொடை நிதி வழங்கும் நிகழ்வு நாடா ளுமன்ற உறுப்பினரின் அங்கஜன் இராமநாதனின் பன்முகப்படுத்தப்பட்டவரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து வழங்கும் நிகழ்வும் இன்று கண்டாவளை பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் – மக்களது பொருளாதாரத்தை மீளவும் கட்டியெடுப்பும் முயற்சிகளை இந்தத்திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துச்செல்கின்றோம்,
அதோடு கிராமத்துப்பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவேண்டும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வறுமையில் முதலிடத்தில் உள்ளன .

வறுமையைப்போக்காது எந்த இலக்கையும் எட்டமுடியாது பொருளாதார முன்னேற்றம் என்பது மிக முக்கியமானது.
தனிவருமானத்தை அதிகரிப்பதுடன், கிராமத்துப்பொருளாதாரத்தையும் வளர்க்கவேண்டு. அதனூடாக எமது பிரதேசத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டும் எனக்குறிப்பிட்டார் .