கொழும்பு – இரத்தினபுரி வீதியில் அவிசாவளை நகருக்குள் பிரவேசிக்காமல் பயணிக்கக் கூடிய குறுக்கு வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அவ்வீதியூடான போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அவிசாவளை நகரின் பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதியை பயன்படுத்துமாறு அனர்த்த மத்திய நிலையம் கோரியுள்ளது.