மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்படுவோரை கண்டறியும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (13) இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாததை காண முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எந்த போக்குவரத்துகளும் நடைபெறாத நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையினை காண முடிகின்றது.
மருந்தகங்கள் மட்டும் இயங்கும் நிலையில் மக்கள் வருகையில்லாத காரணத்தினால் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.