யாழில் ரோந்து நடவடிக்கையில் ராணுவ மோட்டார் சைக்கிள் படையணி

IMG 20210514 WA0068
IMG 20210514 WA0068

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தீவிர நிலையினையடுத்து தொற்று நிலையினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறாத வண்ணம் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்

யாழ்ப்பாண குடாநாட்டில் பிரதான வீதிகளில் ரோந்து நடவடிக்கையினை ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் மேற்கொண்டு வருகின்றார்கள் வீதிகளில் அத்தியாவசிய தேவை, வைத்திய சேவையை பெறும் நோக்கில்
பயணிப்போர் தவிரந்த ஏனையோரை இடை நிறுத்தி எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்