கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 29 பேர் கைது

kaithu
kaithu

கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கில் சிலாபம் – இரணவில் பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கி இருந்த 29 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரணவில்  பிரதேச மக்கள் மற்றும் சிலாபம் காவல்துறையினரின் உதவியுடன் குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வெல்லவாய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

அத்துடன் அவர்களின் பைகளில் பிஸ்கட், மருந்துகள் மற்றும் ஆடைகள் என்பன காணப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் சிலாபம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.