மண்சரிவில் சிக்கி இருவர் காயம்

கினிகத்தேனை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கினிகத்தேனை பிட்டவலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரிய மண்திட்டு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (14) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தந்தையும் மகனுமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் மீது மண் திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீடும் பாரிய அளவில் சேதத்திற்கு உள்ளாகி உள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.