கொரோனா பரவல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ள தகுதியானோரை தெரிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா பெறுமதியான 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண பொதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்குள் வழங்கப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்காக பிரதேச செயலாளர் அலுவலகம், மாவட்ட செலாளர் அலுவலகம், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளால் இந்த நிவாரண பொதி வழங்கப்படுமென வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.