கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்திற்குள் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 8 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேபோல், கம்பஹா மாவட்டத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.
அங்கு சுமார் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருப்பதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப் படுகின்றது. இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு பயணத் தடை ஒரு தடையாக அமையாது என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.