இந்தியத் தலைநகர் டெல்லியில் கொவிட் பரவல் தீவிரநிலை தணிந்து வருவதாக, டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 8,500 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதிக்குப் பின்னர் ஒருநாளில் பதிவான அதிகுறைந்த எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த நாட்களில் அங்கு சராசரியாக நாளாந்தம் 25,000 பேர் வரையில் கொவிட் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.