நாட்டில் இதுவரை 276,762 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

corona 1
corona 1

நாட்டில் நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 61,882 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 276,762 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 11,385 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, இதுவரை 256,004 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதேவேளை, 14,673 பேருக்கு இதுவரை ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.