கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுதர்ஷனி

Sudarshani Fernandopulle 1 700x375 1
Sudarshani Fernandopulle 1 700x375 1

பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதனைடுத்து அவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.