சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் மரணித்துள்ளனர்.
வரகாபொலை – கொலங்கமுவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயதான தாய் ஒருவர் மரணித்தார்.
கடந்த 13ஆம் திகதி இரவு நிலவிய மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் அவருடன் வீட்டிலிருந்து 32 வயதான அவரது மகன் மரணித்தார்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும் சிகிச்சை பலனின்றி மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.