மாரவில ஆதார வைத்தியசாலையின் 20 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 5 வைத்தியர்கள் மற்றும் 08 தாதியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 5 வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களும் மற்றும் 2 குடும்ப நல ஊழியர்களும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.