நுவரெலியா நகரில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட சகல வசதிகளுடனும் கூடிய தனிமைப்படுத்தல் மையம் நாளை முதல் (18) செயற்படும்.
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் தொற்றாளர்களை முறையாக பராமரிக்கின்ற முகமாக நுவரெலியா நகரில் 500 படுக்கை வசதிகளை கொண்ட தனிமைப்படுத்தல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் மையத்தில் ஒரே நேரத்தில் 500 தொற்றாளர்களை தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.