வீதி விபத்து, போக்குவரத்து குற்றங்களை காவல்துறைக்கு அறிவிக்க புதிய செயலி

Vehicle 850x460 acf cropped
Vehicle 850x460 acf cropped

இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான கைப்பேசி செயலியொன்றை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்(ஓய்வுநிலை) சரத் வீரசேகர தலைமையில், அவ்வமைச்சில் இன்று இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ‘ஈ – ட்ரெஃபிக் காவல்துறை ஸ்ரீலங்கா’ என்ற இந்த செயலியின் ஊடாக, பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இன்றி, போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது