பள்ளிவாசல் மதில்களில் ஓவியம் வரைவதற்கு எதிர்ப்பு

a.sali
a.sali

நகரை அழகுபடுத்துவதற்காக முஸ்லிம்களின் மார்க்கத்திற்கு விரோதமான முறையில் பள்ளிவாசல்களின் மதில்களில் ஓவியம் வரைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த அதேவேளை முஸ்லிம்களின் மார்க்கத்திற்கு விரோதமாக குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

வேவல்தெனிய பிரதேசத்தில் பள்ளிவாசல் மதில்களின் மீது நிருவாகத்தினரின் அனுமதியின்றி அவர்களின் மார்க்கத்திற்கு விரோதமாக வரையப்பட்டுள்ள ஓவியம் தொடர்பிலேயே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சிறுபான்மை மக்களை இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.