உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய இளைஞன் இயந்திரத்தின் டயரினுள் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் செங்கலடி பங்குடாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மயிலம்பவெளியை சேர்ந்த நடேஸ் சஞ்சை எனும் 17 வயது இளைஞர் ஆவார்.
குறித்த விபத்தில் விபத்துக்குள்ளான இன்னுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.