வண்ணமயமான நகரங்கள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதனை ஊக்குவிக்கின்ற வகையில் புலம்பெயர் உறவுகளின் 60 ஆயிரம் ரூபா நிதியுதவி மற்றும் தனது சொந்த நிதியில் 40 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து ஒரு இலட்சம் ரூபாவினை எம்.ஏ.சுமந்திரன் வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் மாநகரில் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் வெளிச் சுவர்களில் ஓவியங்களை வரையும் ஓவியக் கலைஞர்களை நேரில் சந்தித்து குறித்த நிதியினை வழங்கி வைத்தார்.