ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டிய விதம் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கியமையினால் அதிகளவு செலவு ஏற்பட்டதாகவும் எதிர்வரும் காலங்களில் இக்குழுவின் பரிந்துரைக்கமைய இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.