குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சிற்கு இடமில்லை

Amit Shah
Amit Shah

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சிற்கு இடமில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் வலியுறுத்தி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா;

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பாறையை போல உறுதியாக இருக்கிறது. இதில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.