மட்டக்களப்பில் 55 பேருக்கு கொரோனா

covid 19 coronavirus morphology network of cells by blackjack3d gettyimages 1214333918 2400x1600 100837131 large
covid 19 coronavirus morphology network of cells by blackjack3d gettyimages 1214333918 2400x1600 100837131 large

மட்டக்களப்பு பொது சுகாதார உத்தியோகத்தர்கள் 4 பேர் உட்பட 55 பேருக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளததையடுத்து 1570 அதிகரித்துள்ளதாக இன்று புதன்கிழமை மட்டக்களப்புபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை சுகாதார பிராந்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார பிராந்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிவைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிராந்திய அதிகாரி பிரிவில் 5 பேரும், ஏறாவூர் சுகாதார பிராந்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், ஆரையம்பதி சுகாதார பிராந்திய அதிகாரி பிரிவில் 3 பேரும

வவுணதீவு மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவர் உட்பட 2 பேரும், விமானப்படை அதிகாரி ஒருவருக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தார் 2 பேரும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் 4 பேர் உட்பட 55 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது

இதேவேளை 3 வது கொரோனா அலையில் 587 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன் 12 பேர் மரணமடைந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 21 மரணங்களும் 1570 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டதுடன் 30877 பேருக்கு அன்டிஜன் மற்றும் பிரி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்