இலங்கையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 761 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 101 பேர் திவுலுப்பிட்டிய மற்றும் 100 பேர் கடவத்தையை சேர்ந்தவர்களாகவுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 493 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .அதில் 263 பேர் பாணந்துறை வடக்கை சேர்ந்தவர்களாகவுள்ளனர்.
இதேவேளை 275 பேர் காலி மற்றும் 265 பேர் குருநாகல் மாவட்டத்திலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.