நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியின் போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ண இறுதி போட்டி எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதற்காக லண்டன் செல்லவுள்ள இந்திய அணி சவுத்தம்படனில் தனிமைப்படுத்தலில் இருக்கும்.
இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் யூன் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.