மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்-வைத்தியர் நவீன் டி சொய்சா!

image 2021 05 20 213636
image 2021 05 20 213636

நாளாந்தம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிவரும் இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானம் மிக்கதாக அமைந்திருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை காத்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த கொரோனா கொத்தணி எங்கிருந்து உருவாகும் என்ற விடயம் தமக்கு தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அதிகாரிகளால் மாத்திரம் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த கட்டுப்பாடுகளை மீறும் பல சம்பவங்கள் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் இந்த விடயத்தில் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என வைத்தியர் சொய்சா வலியுறுத்தியுள்ளார்.