9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

thanimai
thanimai

நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலி காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கல்மடு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, மொனராகலை மாவட்டத்தின் செவனகல காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கிரிவௌ, செவனகல, பஹிராவ, ஹபரத்தவெல, ஹபருகல, மஹாம, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.