தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

IMG 20210228 WA0011
IMG 20210228 WA0011

யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா  பெறுமதியான உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் 

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணி தொற்றாளர்களுடன் நடமாடியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்ட  குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும்  இடைக்கால நிவாரண உதவியாக அந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதியை  மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம் 

அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்று வரை சுமார் 7251 குடும்பங்களுக்கு  அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா  பெறுமதி கொண்ட உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது  தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி  வழங்கப்பட்டு வருகின்றது 


இந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு  இருக்கும்  காலத்தில் எமக்கு உரிய விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கு  அதுகிடைக்கும் அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே உதவிப் பொருட்களை வழங்க முடியும் 

இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர் களுக்கும் உரியவரான அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன எனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்