ஈழ அகதிகளை நாடு திரும்புமாறு சுமந்திரன் அழைப்பு

Sumanthiran 2
Sumanthiran 2

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு துரத்தப்பட்ட இலங்கை அகதிகள் நாட்டிற்கு மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தியா தனது நலன் கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள் தொடர்பில் நான் கருத்து கூற முடியாது.

எங்களின் விருப்பம் என்னவெனில் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அதனை சுயாதீனமாக தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு.

இவர்கள் நாடு திரும்புகின்ற வேளையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தொடர்ந்தும் நாங்கள் அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.