வரிச்சலுகைகளினால் முஸ்லிம் வர்த்தகர்களுக்கே அதிக நன்மை

NIMAL
NIMAL

அரசாங்கம் தற்போது வழங்கியுள்ள வரிச் சலுகைகளின் பிரகாரம் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு அதிக நன்மை கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் ஆற்றிய கன்னி உரையில் தமிழ், முஸ்லிம் மக்கள் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை அவர் பெற்றுக்கொடுப்பார். நாட்டில் மீண்டும் குண்டுகள் வெடிக்காது என தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.