பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இலங்கை இங்கிலாந்தின் காலனித்துவத்திற்குட்பட்ட நாடு என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு என கலாநிதி ஓமல்பே சோபிதா தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ள இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கருத்தை எதிர்த்து இலங்கை பொதுநலவாய அமைப்பிலிருந்து விரைவாக வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.