சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 650,000 ரூபா பெறுமதியான உளுந்து பொதிகள் மீட்பு

1621646328 1982529 hirunews copy
1621646328 1982529 hirunews copy

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 65 இலட்சம் பெறுமதியான உளுந்து பொதிகளை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கோதுமை மா எனக்கூறி குறித்த உளுந்து தொகை நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

சுமார்  552 கோதுமை மா பொதிகளில் 15060 கிலோகிராம் உளுந்து தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட விரோத இறக்குமதியால் அரசாங்கத்திற்கு 3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.