அனுமதிப்பத்திரமின்றி ஆடுகளை கொண்டுசென்ற நபர் ஒருவரை கனகராயன்குளம் காவற்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கனகராயன்குளம் பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி 24 ஆடுகளை கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த இராணுவத்தினர் அவரை கனகராயன்குளம் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.