கடந்த ஒரு வாரத்தில் 17000க்கும் அதிகமானோருக்கு தொற்று

1601904525 corona 2
1601904525 corona 2

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 17000 க்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 211 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்று உறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.