நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 17000 க்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 211 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்று உறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.