அழகான இலங்கை உருவாக்குதல் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தினை அழகுபடுத்தும் செயற்பாட்டில் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழகான இலங்கை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .