நுவரெலியாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா

realistic coronavirus background 52683 35109 1
realistic coronavirus background 52683 35109 1

நுவரெலியா- டயகம, சந்திரிகாமம் தோட்டத்திற்கு அருகிலுள்ள  தேசிய கால்நடை பண்ணையில் பணி புரியும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”தேசிய கால்நடை பண்ணையில் பணிப்புரிந்த 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணிய 70 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த பி.சி.ஆர்.முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே மேலும் 32பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த தொற்றாளர்களில் நால்வர், டயகம-சந்திரிகாமம் தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் தொற்றாளர்களாக அடையாயம் காணப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.