தமிழகத்தில் பொதுமுடக்கம் அமுலுக்கு வந்தது

5 750x375 1
5 750x375 1

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற பொது முடக்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தளர்வுகள் அற்ற பொதுமுடக்கம் பிறப்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று முதல் தளர்வுகள் அற்ற பொதுமுடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த பொதுமுடக்கம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.