மட்டக்களப்பில் 97 பேருக்கு கொரோனா

DSC 1840
DSC 1840

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26) தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளான மட்டக்களப்பில் 02 பேரும், களுவாஞ்சிகுடியில் 08 பேரும், வாழைச்சேனையில் 04 பேரும், காத்தான்குடியில் 13 பேரும், ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேரும், செங்கலடியில் 02 பேரும், ஏறாவூர் 09 பேரும்,வவுனதீவு 11 பேரும், வெல்லாவெளியில் 02 பேரும், ஆரையம்பதியில் 15 பேரும், கிரானில் 08 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 05 பேர் உட்பட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.