தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை!

DSC00341
DSC00341

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு இறம்பொடையில் அமைந்துள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளரும், மலையகத்திற்கு பொறுப்பான கொவிட் பாதுகாப்பு செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பிரிவிற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் இராணுவத்தினர் தற்போது 275 படுக்கைகளை கொண்ட மத்திய நிலையத்தை அமைத்து வருகின்றனர்.

அத்துடன் வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.

குறித்த கொரோனா சிகிச்சை பிரிவு எதிர்வரும் 29ம் திகதி சுகாதார பிரிவினருக்கு கையளிக்கப்படும் என பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.