திருகோணமலை – மிரிஸ்வெவ பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) மாலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண் அதே இடத்தைச் சேர்ந்த 38 வயது உடையவர் ஆவார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்