இரத்தினபுரியில் பல்வேறு வாகனங்களை திருடி மீள விற்பனை செய்து வந்த ஐவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக இந்த திருட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தமை தொடர்பில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 13 முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதானவர்கள் 23 வயது முதல் 47 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு நடவடிக்கை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.