மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள பெண் அதிகாரி!

5 gg
5 gg

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ், தேசிய மனநல நிறுவனத்திற்கு இன்று மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் தொடர்பில் விசேட மனநல மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய தேசிய மனநல நிறுவனத்தில் இன்று மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த விசாரணைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ், கடந்த திங்கட்கிழமை சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வாகனத்தில் நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.