மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மொரட்டுவ நகர சபை தவிசாளர் எதிர்வரும் யூன் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவ நகரசபைத் தவிசாளர் சமன் லால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
நேற்று மொரட்டுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டத்தின்போது, வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது