சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா கைதி சரணடைந்தார்!

images 15
images 15

சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான கைதி மீண்டும் சிறைச்சாலையில் சரணடைந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி பூஸா சிறைச்சாலையில் இருந்து அங்குனுகொனுபெலெஸ்ஸ கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு கைதிகளை அழைத்து செல்லும் போது மாத்தறை – வல்கம பகுதியில் வைத்து பேருந்தின் ஜன்னல் கம்பிகளை அகற்றி குறித்த சிறைக்கைதி தப்பிச்சென்றிருந்தார்.

இவர் சிகிச்சைகளுக்காக அங்குனுகொனுபெலெஸ்ஸ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.