மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட 60 அன்டிஜன் பரிசோதனையிலேயே 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது, போரதீவுப்பற்று சுகாதார பிரிவுக்கு உட்பட்ட திக்கோடை, பெரியபோரதீவு, மண்டூர், பட்டாபுரம் ஆகிய பகுதிகளிலேயே நேற்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.