எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி மாவட்டத்தில் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரசு தொற்று எச்சரிக்கை அதிகளவில் நிலவும் மாவட்டங்களைத் தெரிவு செய்து தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசியேற்றும் பணி முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.