ஓட்டமாவடியில் 301 சடலங்கள் அடக்கம்

01 14
01 14

இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மையவாடியில் நேற்று(28) பதினான்கு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இன்று (29)கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அத்தோடு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மையவாடியினை பயன்படுத்தி கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை காட்டி சிலர் பணம் அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு எமது சபையினூடாக பணம் அறவிடப்படவில்லை. அவ்வாறு யாரும் பணம் அறவிடப்பட்டால் வழங்க வேண்டாம் என்றும், பணம் கோருபவர்களை எங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகின்றேன்.

நாட்டின் கொரோனா மரணம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் வேறு பாகங்களிலும் அடக்கம் செய்வதற்கு உரிய இடங்களை அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.