இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்

santhapuream01
santhapuream01

சாந்தபுரம் கிராமம் முழுமையான இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் வெளியில் வெளியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சாந்தபுரம் கிராமத்தில் நேற்றும் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,
சுகாதாரத் துறையினர் குறித்த கிராமத்தினை பார்வையிட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பலர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


இதேவேளை  தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாட்டினை மீறி அந்தக் கிராமத்தில் பெருமளவானவர்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடியிருந்ததை அவதானிக்க முடிந்திருக்கின்றது.

இதனை அடுத்து அந்தப் பகுதியைச் சூழ பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பயணக்கட்டுப்பாட்டு நடைமுறை சாந்தபுரத்தில் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.