2020/2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை மாணவர்களுக்கு வழங்க யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஏற்பாடு செய்துள்ளது என வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 01/06/2021 அன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள இராமச்சந்திராஸ் புத்தக நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே மாணவர்கள் தங்களது பாடசாலை அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து குறித்த கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.