யாழ் மாவட்டத்திற்கு விரைவில் அடுத்த கட்ட தடுப்பூசி – அங்கஜன்

1 1
1 1

யாழ் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பட்சத்தில் விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசி கிடைக்கப்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வைத்தியசாலை பதில் பணிப்பாளருடனும் கலந்துரையாடியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கைகயில்…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகமாக இருந்தபோதும் இப்போது பயணத்தடை காரணமாக குறைந்து வருகிறது.

நேற்றைய தினம் வருகைதந்த நாமல் ராஜபக்ஷ தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தெரிவித்ததுடன் முதல் கட்டம் 50,000 தடுப்பூசி போடப்பட்டு முடிவடைந்தால் அடுத்த கட்டமாக மேலும் 50,000 தடுப்பூசி அனுப்ப முடியும் என தெரிவித்திருந்தார்.

52 வீதமான மக்கள் நேற்று யாழில் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். மக்களுக்கான தேவையற்ற பயத்தைப் போக்க தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளாக நாங்கள் தெளிவூட்டல்களை செய்வதோடு அரச உத்தியோகத்தர்களும் அதனை செய்ய வேண்டும்.

முதல்கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு அடுத்த கட்ட தடுப்பூசி போடுவதற்கு 12 வார கால இடைவெளி உள்ளது. அந்த சீரான இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்படும் என்றார்.