வாழைச்சேனையில் மூன்று காவல்துறையினர் உட்பட நால்வருக்கு கொரோனா!

IMG 20210531 WA0056
IMG 20210531 WA0056

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று திங்கட்கிழமை நாற்பத்தி மூன்று (43) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதில் மூன்று பேர் காவல்துறையினர் எனவும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை காவல் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கொரோனா தொற்றாளருடன் நெருங்கியவர்கள் என 43 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், 40 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இடம்பெற்றதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

43 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதில் மூன்று பேர் வாழைச்சேனை காவல்துறையினர் என்பதுடன், ஞாயிற்றுக்கிழமை இரண்டு காவல்துறையினர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.